முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைமகள் பின்பனிப்பருவங்கண்டு வருந்தல்
நன்பனி வெண்மதி யொன்றுடை யோன்வெங்கை நாட்டொருதம்
அன்ப னிருந்துயர் தீர்துணை யாக வடலரிபோல்
முன்பனி கஞ்செலச் சென்றவர் காண்கிலர் மூடியெங்கும்
பின்பனி பெய்து பெருந்துயர் வேலை பெருகுவதே.
(419)
தோழியாற்றுவித்தல்
நின்பா லுதவி நினைந்துவந் தார்கைந் நிமிர்த்தலரும்
பின்பாய் பனிவரு நாளயில் வேற்கட் பிறைநுதலாய்
தன்பாத மென்றலைக் கீவோன் றிருவெங்கை தன்னிலொரு
மன்பா லுதவி நினைந்துமுன் போயின மன்னவரே.
(420)
பொருள்வயிற்பிரிவு
பொருள்வயிற்பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல்
திரைப்பா லெழுநஞ்ச முண்டோன் றிருவெங்கைத் தென்கயத்தின்
விரைப்பா னலங்கண் விளங்கிழை யாய்மக மேருவென்னும்
வரைப்பா னிதியந் தரற்கே கினர்கடன் மாநிலத்தில்
இரப்பார் மிடிகள் புகுமிடந் தேட விறையவரே.
(421)
தலைவி யிளவேனிற்பருவங்கண்டு வருந்தல்
போதந் திறைப்ப வழறென்றல் பற்றுதல் போலவிளஞ்
சூதந் தழைக்குமிந் நாள்கண்டி லார்கொ றுணிவொடுநால்
வேதந் துதிக்குந் தனிமூல காரணர் வெங்கைவெற்பில்
பாதஞ் சிவக்கப் பொருள்வயிற் போயின பாதகரே.
(422)

419.19. இருந்துயர்-பெருந்துன்பம். அடல்அரி-வலிமை மிகுந்த சிங்கம். அனிகம்-படை. 420.20. கைந்நிமிர்த்தல் அருமையாயது குளிர்மிகுதியால் என்க. பிறை-எட்டாம் நாட்பிறை. நுதல்-நெற்றி. 421.21. திரை-ஆகு பெயர். கயம்-ஓடை. விரை-வாசனை. பானல்-கருங்குவளை; ஆகு பெயர். வரை-மலை. புகுமிடம்-புகுந்தொளிக்குமிடம். 422.22. போதந்து வந்து. இறைத்தல்-வீசுதல். சூதம்-மாமரம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்