9. திருவெங்கைக்கோவை |
|
தலைமகள் பின்பனிப்பருவங்கண்டு வருந்தல் |
|
|
நன்பனி வெண்மதி யொன்றுடை யோன்வெங்கை நாட்டொருதம் அன்ப னிருந்துயர் தீர்துணை யாக வடலரிபோல் முன்பனி கஞ்செலச் சென்றவர் காண்கிலர் மூடியெங்கும் பின்பனி பெய்து பெருந்துயர் வேலை பெருகுவதே.
|
(419) |
|
தோழியாற்றுவித்தல் |
|
|
நின்பா லுதவி நினைந்துவந் தார்கைந் நிமிர்த்தலரும் பின்பாய் பனிவரு நாளயில் வேற்கட் பிறைநுதலாய் தன்பாத மென்றலைக் கீவோன் றிருவெங்கை தன்னிலொரு மன்பா லுதவி நினைந்துமுன் போயின மன்னவரே.
|
(420) |
|
பொருள்வயிற்பிரிவு பொருள்வயிற்பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல் |
|
|
திரைப்பா லெழுநஞ்ச முண்டோன் றிருவெங்கைத் தென்கயத்தின் விரைப்பா னலங்கண் விளங்கிழை யாய்மக மேருவென்னும் வரைப்பா னிதியந் தரற்கே கினர்கடன் மாநிலத்தில் இரப்பார் மிடிகள் புகுமிடந் தேட விறையவரே.
|
(421) |
|
தலைவி யிளவேனிற்பருவங்கண்டு வருந்தல் |
|
|
போதந் திறைப்ப வழறென்றல் பற்றுதல் போலவிளஞ் சூதந் தழைக்குமிந் நாள்கண்டி லார்கொ றுணிவொடுநால் வேதந் துதிக்குந் தனிமூல காரணர் வெங்கைவெற்பில் பாதஞ் சிவக்கப் பொருள்வயிற் போயின பாதகரே.
|
(422) |
|
|
|
419.19. இருந்துயர்-பெருந்துன்பம். அடல்அரி-வலிமை மிகுந்த சிங்கம். அனிகம்-படை. 420.20. கைந்நிமிர்த்தல் அருமையாயது குளிர்மிகுதியால் என்க. பிறை-எட்டாம் நாட்பிறை. நுதல்-நெற்றி. 421.21. திரை-ஆகு பெயர். கயம்-ஓடை. விரை-வாசனை. பானல்-கருங்குவளை; ஆகு பெயர். வரை-மலை. புகுமிடம்-புகுந்தொளிக்குமிடம். 422.22. போதந்து வந்து. இறைத்தல்-வீசுதல். சூதம்-மாமரம்.
|
|
|
|