9. திருவெங்கைக்கோவை |
|
தூதிற்பிரிவு தூதிற்குப் பிாவு தலைமகன்றன்னாலுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல் |
|
|
சடைநின்ற கங்கையர் வெங்கையி லேயொரு சந்துசென்றார் படைநின்ற கண்ணிநங் காவல ரின்றுபற் றாசொன்றுதான் தொடைநின்ற நேரிசை முன்குற ளுந்தனிச் சொல்லுமுற இடைநின்று கூட்டுதல் போலிரு வேந்தை யிசைப்பதற்கே.
|
(415) |
|
தலைமகள் முன்பனிப்பருவங்கண்டு வருந்தல் |
|
|
கருங்காள கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில் பொருங்கா வலர்தம் பகைதணிப் பான்முனம் போயினவர் பெருங்கால முன்பனி நாள்வந்தும் வந்திலர் பேதையர்மேல் வருங்காம வெஞ்சரந் தன்னையு மாற்ற மனமதித்தே.
|
(416) |
|
தோழியாற்றுவித்தல் |
|
|
போதாகி வந்த பிறைவே ணியர்வெங்கைப் பொன்னகரில் காதாகி வந்தநல் வள்ளையிற் றூங்கு கனங்குழைசேர் மாதாகி வந்தசெந் தேனே யவர்தம் வரவுசொலத் தூதாகி வந்தது முன்பனி நாண்மன்னர் தூதுவர்க்கே.
|
(417) |
|
துணைவயிற்பிரிவு துணைவயிற்பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழிதலைமகட்குணர்த்தல் |
|
|
கடுக்கை யணிந்த முடியோன் றிருவெங்கைக் காரிகையாய் உடுக்கை யிழந்தவன் கையோர் பொருளை யொழித்ததனைத் தடுக்கை விரைந்தது போனட்ட வேந்தன் றனக்குதவி அடுக்கை விழைந்து நினைவிடுத் தார்நட் பறிந்தவரே.
|
(418) |
|
|
|
415.15. சந்து சென்றார்-தூதுசென்றவர். படைநின்ற கண்ணி-வேற்படைபோல் அமைந்த கண்ணையுடையவள். பற்றாசு-இரண்டை ஒன்று சேர்ப்பது. 416.16. காளம்-நஞ்சு. பொருதல்-போர் செய்தல். தணிப்பான்-தணிக்க. காமசரம்-காமன்கணை. 417.17. போது-அரும்பு. வள்ளை-வள்ளைத் தண்டு. தூங்குதல்-தொங்குதல். கனங்குழை-கனவிய குழை (இது காதணி.) 418.18. கடுக்கை-கொன்றைமாலை. உடுக்கை-ஆடை. விழைதல்-விரும்பல். விடுத்தல்-நீங்கல்.
|
|
|
|