முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
காமத்திற் படிலுமையாங் கடுநிரயத் திடுவமென
நாமத்திற் படவெமக்கு நவின்றொருவன் றூதாய்நீ
யாமத்திற் றனியிருட்க ணேந்திழைபா லெய்தியதென்.
 
எனமிகு வளமுள வியலதி சயமொடு
முனிவரர் பலவகை மொழிதரு புகழினை
பலகலை வலபுல னிலைமல வலைமலை
சிலரல துலகலை கலர்சொல விலகிலை.

இவையிரண்டும் ஈரடியராகம்

எனவாங்கு, இது தனிச்சொல்
 
ஒன்றொருயிர் தனைச்செகுப்பி னுமைநிரயத் திடுவமென
மன்றறைய வெமக்கியம்பி மைந்தனைமுன் றந்தைதனைக்
கொன்றவரை யுவந்தருளிக் கொடுத்தனைவா னுலகென்கொல்.

இவைமூன்றும் மூவடித்தாழிசை.
 
நீவிர்புல வருந்திலெரி நிரயத்தி லிடுவமெனத்
தேவவெமக் கியம்பினைநீ சிலைவேட னிடும்பிசிதம்
ஆவலொடு மிசைந்தவனுக் கருளினைமெய்க் கதியென்கொல்.
 

1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான். நாமத்திற்பட-அச்சத்தையடைய. ஏந்திழை-பரவை நாச்சியார். புலவு-ஊன். பிசிதம்-ஊன். செகுப்பின்-கொன்றால். மைந்தனை-சீராளனை. மலவலை-மலமாகிய வலையை. கலர்-கீழ்மக்கள். இலகிலை-விளங்காதவனே! எழிலி-முகில்கள். 1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான். 1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்