முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
எழிலிகண் படுக்கும் பொழில்புடை சூழ்ந்த
வெங்கையம் பதிவா ழெங்க ணாயக
பழமலை நாதநிற் பரவுவன் விசும்பின்
அரையனுக் கரைய னாகுமந் நிலையும்
நினைகிலன் றமியே னின்னடி யவர்கட்
கென்று மடியவ னாகும்
ஒன்றொரு வரமு முதவுதி யெனவே.
(1)
நேரிசைவெண்பா
எவ்வா றளித்த திமையப் புதுமலைதன்
ஓவ்வா விளமை யொருமகளை - அவ்வான்
பரவுதிரு வெங்கைப் பழமலையே நிற்கு
விரவுகிளை யோடும் விழைந்து.
(2)
கட்டளைக்கலித்துறை
விழக்க மலங்களை மோதிவல் வாளை வியன்படுகர்
உழக்க மலங்களை போய்ப்புகும் வெங்கை யொருவவிண்ணோர்
தொழக்க மலங்களை மாமதி வேணி சுமந்தருள்வோய்
பழக்க மலங்களை யான்பவ வேரைப் பறிப்பதற்கே.
(3)

1. எழிலி-முகில்கள். விசும்பின் அரையன்-தேவர் கோமான். ஒன்று-பொருந்திய.2. ஒவ்வா-ஒப்பற்ற. வான்பரவு-விண்ணவர் போற்றுகிற. விரவு-சூழ்ந்த. கிளை-உறவினர். விழைந்து-விரும்பி. 3. வியன்படுகர்-ஆழ்ந்த குளங்கள். மலங்கு-விலாங்குமீன். அளை-சேறு. கமலம்-நீர். பழக்க மலங்களை-பழக்கமாகவுள்ள. மும்மலங்களை. பவவேர்-பிறவிவேர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்