10. திருவெங்கைக் கலம்பகம் |
|
மேற்படிவேறு |
|
|
வாசக் கமல மலர்த்திருவே மயிலே யென்கண் மணியேநின் ஆசைக் குமுத மலர்வாயி னமுதம் பெறுதற் கரிதாயோ ஓசைக் கடலைக் கடைந்துகடு வுமிழ விமையோ ரொடும்வெங்கை ஈசற் கபய மபயமென விரிந்தான் மேனி கரிந்தானே.
|
(14) |
|
வண்ணம் |
|
|
கன்றுக்கர மலராண்முக விந்துத்தவி சடைமீனிகர் கண்டத்தணி மணிமாலையள் கயிலையங்கிரியார் கங்கைச்சடை முடிநேடிய துங்கப்பற வையுநாடுறு கஞ்சத்திரு வடியீதென நவில்சிலம்படியாள் வென்றிச்சிலை மதன்வாள்களி னஞ்சைத்தட வுதல்போலமை விஞ்சப்புனை விழியாளொளி பெருகுசெங்ழையாள் விம்பப்பிறை யெனநீறிடு சந்தச்சிலை நுதலாடிரு வெங்கைப்பழ மலைநாயகர் பவனிவந்திடவே சென்றுற்றன டொழுதாளுமை தங்கப்படு புறநாடினள் செங்கைக்கவி னுழையீதிவள் பயில்வதொன்றறியாள் சிந்தித்தன ளொருமாதினி யிந்தப்புற முறமானொழி செங்கைக்கணு மிவரேகொளி னனிசிறந்திடுமே என்றித்தகை பலகூறினள் கொங்கைச்சுவ டுறுமார்பினை யின்பத்தொடு மெதிர்நாடின ளெனையணைந்தருளா லிந்தப்படி தனியேன்முலை சந்தத்திரு மணிமார்பழ கெஞ்சப்படு கிலர்பாரென மதிமயங்கினளே.
|
(15) |
|
|
|
14. வாசக்கமலம்-மணம் பொருந்திய தாமரை. கடுஉமிழ-நஞ்சை வெளிப்படுத்த. இரிந்தான்-ஓடினான். மேனி கரிந்தான்-திருமால். 15. கன்று-வளையணிந்த, கன்றிய. முகஇந்து-முகமாகிய திங்கள். கஞ்சத் திருவடி-தாமரை மலரைப்போன்ற திருவடி. விஞ்ச-மிகவும். பிறை விம்பம்-பிறைவடிவம்.
|
|
|
|