முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அம்புமே லிருக்க நாரி யடற்சிலை கொண்ட வெங்கை
எம்பிரா னொடும்போர் செய்வ னென்றுதன் னிதயத் தெண்ணி
அம்பின்மே லிருக்கு நாரி யருஞ்சிலை கரங்கொண் டுற்றோன்
எம்பெறா வமுதன் னாளை யென்செயா னுலகிற் றானே.
(10)
கலிநிலைத்துறை
தாமங் கமழு மொய்ம்புடை யன்பர் தமியேன்வெங்
காமங் கனலு மனமொடு துன்பக் கடல்வீழ
ஏமங் கருதிச் சென்றன ருமையன் றிதுகொண்டோ
வாமங் கலவெங் கைப்பர னோடொன் றானாளே.
(11)
கலிவிருத்தம்
ஆயிழை மகளிர்வா ழகங்க டோறுமுன்
நீயிரும் பலிகொள நினைந்து வெங்கையில்
தூயநின் சடையினிற் சோமன் சுற்றியே
ஏயினை வெற்றரை யாகி யென்னையே.
(12)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
என்றனை முகத்தின் வென்றா ளிவளெனும் பகையுட் கொண்டோ
பின்றலி லன்ப ரென்று பிரிவரென் றிருந்து வெங்கை
மின்றிகழ் சடிலத் தண்ணன் மேவலர் போல்வெண் டிங்காள்
வன்றுய ருழக்க வென்மேன் மலிதழல் சொரியும் வாறே.
(13)

10. அம்பு-கணை. பெறா-பெறுதற்கரிய. சிவபெருமானுக்கு அம்பு திருமாலும் நாண் ஆதிசேடனுமாகலின் அம்புமேலிருக்கும் நாரி என்றும், காமனுக்க அம்பு மலரும் நாண் வண்டுமாகலின் அம்பின் மேலிருக்கும் நாரிநயன்றும் முரண்பட விதந்தபடி. 11. தாமம்-மாலை. மொய்ம்பு-தோள். கனலும்-வெதுப்பும். ஏமம்-பொன். வாமம்-இடப்பாகம். 12. ஆயிழை-ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்கள். சோமன்-திங்கள்; ஆடை. ஏயினை-சென்றாய். 13. முகத்தில் வென்றாள்-முகத்தினால் தோற்கடித்தாள். பின்றலில்-மாறுதலில்லாத. மேவலர்-பகைவர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்