முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
மடக்கு தாழிசை
படுமத்தமிழுக் குவந்தவிறை விடுமத்தமிழுக் குவந்தவிறை
       பண்டங்கரிய வடிவாமன் கண்டங்கரிய வடிவாமன்
சடையற்படுமம் புயனிசையான் றொடையற்படுமம் புயனிசையான்
       சம்புவனமாக் குணர்வாக னம்புவனமாக் குணர்வாகன்
கடலைக்கலக்கு மலைவில்லா னுடலைக்கலக்கு மலைவில்லான்
       கங்கைப்பதியன் பரையானான் வெங்கைப்பதியன் பரையானான்
அடலைப்புரத்தங் கணையெய்தா னுடலைப்புரத்தங் கணையெய்தான்
       அன்பினிகழ வணங்கீரே துன்பினிகழ வணங்கீரே.
(7)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கீற்றுப் பிறையை யணிந்ததிரு வெங்கை விருத்த கிரிநாதன்
ஆற்றுப் பொருளைக் குளத்திலொரு புலவர்க் கழைத்தன் றருளினோன்
சோற்றுத் துறையுந் திருநெய்த்தா னமுமீங் குடையான் சுழலாமல்
தோற்றுப் பசிநோய் தொலைப்பனவன் றனையே துதியீர் புலவீரே.
(8)
அம்மானை. மடக்கு. கலித்தாழிசை
புண்ணியனம் வெங்கைப் புனிதனயன் மாலெதிரே
அண்ணலரும் பேரொளியா யன்றெழுந்தா னம்மானை
அண்ணலரும் பேரொளியா யன்றெழுந்தா னாமாகில்
கண்ணி லவரெளிதிற் காணாரோ வம்மானை
கண்ணின்றிக் காணுங் கதிரொளிகா ணம்மானை.
(9)

7. படும்-குறைந்த. இழுக்குவந்த-தவறு பொருந்திய. இறை-விடையும். விடும்-நீங்கிய. உவந்த இறை-விரும்பிய இறைவர். பண்தங்கு-குணம் பொருந்திய. சம்பு-நரி. வனமா-அழகிய குதிரை. அம்புவனம் ஆக்கு-அழகிய உலகங்களைப் படைக்கிற. உணர்வு ஆகன். ஞானவடிவன். உடலைக்கலக்கு மலைவு இல்லான்-உடலைக் கலங்கச் செய்கிற மயக்கமில்லாதவன். பரையானான் பராசத்தியாகவும் விளங்குபவன். வணங்கீர்-வணங்குவீர்களாக. அணங்கீர்-வருந்துதலடைய மாட்டீர். 8. ஆற்றுப்பொருள்-மணி மூத்தாநதியிலிட்ட பொருள். குளத்தில்-திருவாரூர்க் கமலாலய தடாகத்தில். ஒருபுலவர்-சுந்தரர். சோற்றுத்துறை-திருச்சோற்றுத்துறை என்னுஞ் சிவப்பதி; திருநெய்த்தானம்-திருநெய்த்தானம் என்னுஞ் சிவப்பதி. சுழலாமல்-எங்கும் போய் அலையாமல். 9. அயன்-நான்முகன். மால்-திருமால்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்