10. திருவெங்கைக் கலம்பகம் |
|
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
|
|
துளங்குமொளித் திங்கடனை யம்புலியென் றுலகமெலாஞ் சொல்லக் கேட்டும் பளிங்கனைய வயிற்றினது விழுங்கியமான் புறந்தோன்றப் பார்த்துங் கெட்டேன் இளங்கொடிய புலியிதென வறிந்திலே னறிந்தேனே லென்பட் டாலுங் களங்கனிமா மிடற்றிறையைத் திருவெங்கைக் காவலனைக் கைவி டேனே.
|
(102) |
|
|
|
102.துளங்கும்-விளங்கும். அம்புலியென்றதற் கேற்ப மானை விழுங்கிய தென்றபடி. களங்கனி-களாக்கனியைப் போன்ற. மா-கரிய. மிடறு-கண்டம்.
|
|
|
|