முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
14. குறுங்கழிநெடில்
[குறுங்கழிநெடில் இதில் அமைந்துள்ள பாடல்கள் பத்தும் நெடுங்கழிநெடிலினுங் குறுகியதாகலின் குறுங்கழிநெடில் என்று பெயர் பெற்றது. இப்பாடல்களும் திருக்கையில் எழுந்தருளிய இட்டலிங்கத்தின்மீது பாடப்பட்டனவேயாம்.]
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பொன்செய்வா ணிகர்போ லெவ்வழி யானும்
      புண்ணிய மீட்டினு மறிஞர்
கொன்செய்பா தகமே புரிந்தன னின்றாள்
      குறுகுவ தென்றென விரங்க
முன்செய்தீ வினையோ கனவிலு மறமே
      மொழிகிலேன் களித்திருக் கின்றேன்
என்செய்கோ மறலிக் கென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(1)
மென்னிழற் றருவை யாடைபவர் தம்மை
      விடாநிழல் விட்டிடு மாபோல்
நின்னடிக் கமல மடைந்திடிற் றொடர்ந்து
      நீங்கலா வினையுநீங் குறுமே
கன்னலிற் கனியிற் சுவைதரு மமுதே
      கண்மணி யேயருட் கடலே
என்னுயிர்த் துணையே யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(2)

1. பொன் செய் வாணிகர்-பொருள்தேடும் வணிகர்கள். கொன் செய்-தீமையைச் செய்கின்ற. என் செய்தோ-யாது செய்வேனோ. மறலிக்கு-நமனுக்கு. 2. விடாநிழல்-ஒருவரை எப்பொழுதும் விடாத அவர்களுடைய நிழல். நீங்கலா-நீங்காத. கன்னல்-கரும்பு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்