17. சிவநாம மகிமை |
|
|
தீய நாளொடு கோளின் செயிர்தபும் நோய கன்றிடு நூறெனக் கூறிய ஆயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந் தீய தீருஞ் சிவசிவ வென்மினே.
|
(6) |
|
|
வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின் திரிந்து காப்பன் சிவசிவ வென்மினே.
|
(7) |
|
|
முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும் வந்த தீவினை மாற்றுவ னாதலால் சிந்தை யோடு சிவசிவ வென்மினே.
|
(8) |
|
|
நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வான் ஈச ரேனுஞ் சிவசிவ வென்கிலார் நீச ரேயென் றியம்புறு நின்றுப தேச நூல்கள் சிவசிவ வென்மினே.
|
(9) |
|
|
எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர் வண்ண மென்பதங் கிட்டி வணங்கவும் உண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன் திண்ண மீது சிவசிவ வென்மினே.
|
(10) |
|
|
இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங் கொலைவேட னெனினும் பொல்லாப் பழிமருவு பதகனெனி னும்பதிக னெனினுமிகப் பகரா நின்ற மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென் றொருமுறைதான் மொழியி லன்னோன் செழியநறு மலரடியின் றுகளன்றோ வெங்கள்குல தெய்வ மென்ப.
|
(11) |
|
|
|
6. தீயநாள்-தீய கோள்கள் பொருந்தியநாள். செயிர்தபும்-குற்றம் நீங்கும். பல்கும்-மிகுதிப்படும். 7. பின்திரிந்து-சிவ சிவ என்பவர்கட்குப்பின்னேதிரிந்து. 8. முந்தை-முன்பு. முன்பு சிவ சிவ என்று ஒருமுறை கூறியவர் பிறகு அப்பெருமானை இகழ்ந்தாலும் தீவிணையை மாற்றியருளுவர் என்றபடி. 9. நீசர்-இழிந்தவர். வானீசர்-தேவர்கள். இயம்புறும்-கூறும். 10. வண்ணமென்பதம்-அழகிய மெல்லிய கால்கள். கிட்டி-நெருங்கி. ஒண்டிறல் கூற்றுவன்-மிகுந்த ஆற்றலமைந்த நமன். 11. புன்கரும நெறியினன்-இழிந்த செய்கைகளை மேற்கொண்டிருப்பவன். பழிமருவு-பழிபொருந்திய. பதகன்-பாதகன். பதிதன்-இழிந்தவன். துகள்-தூள்.
|
|
|
|