முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
20. சிவஞானபாலையசுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி
தூதுவிடு நம்பிவரு கிலன்சிலையா லெறிந்த
       தொண்டனிலை விசயனும்வில் லோடும்வந்தா னில்லை
ஏதமறு மியற்பகையார் கிளைஞர்கள்வந் தடைந்தா
       ரில்லைநினை மண்சுமவென் றொருபிரம்பா லடித்தோன்
போதிலனின் றிருவடியிற் போதுகள் தூய்ப் பரவிப்
       போற்றலுறு மடியவரே பொருந்தினரெம் மருங்குஞ்
சீதமதி துறந்தமுடி மருவுசிவ ஞான
       தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.
(4)

4. தூதுவிடுநம்பி-சுந்தரர். சிலையால் எறிந்த தொண்டன்-சாக்கிய நாயனார். போதுகள் தூய்-மலர்களைத் தூவி. சீதமதி-குளிர்ந்த திங்கள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்