முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
சீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த
      செல்வமு மில்லில்வாழ் பவர்க்குப்
பேரணி கலமென் புதல்வருங் கதியும்
      பெறத்துதிப் பவர்க்கருள் பவனீ
நேரணி கதியை மறந்தவர் கண்டு
      நினைந்துற மிக்கபே ரருளால்
தாரணி முழுதுந் தோன்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(100)

100. என்புதல்வர்-வேற்றுமைத் தொகை. கதியை மறந்தவர் தன்னைக் கண்ட மாத்திரத்தே அச்சிந்தனையுடையராய் நினைந்து அக்கதிபெறத் தோன்றிடும் என்க. நினைந்தென்பது-நினைக்கமுத்தி தருதலைக்குறித்து நின்றது. பேர் அணிகலம்-சிறந்த ஆபரணம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்