முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
மேருக் குவடு நிகர்தோட் பழமலை மேவுதிருத்
தேருக் குவடு வசமாடு மாடத் தெருவினிற்போய்
நீருக் குவடு விழியெழின் மாய்ந்தெதிர் நின்றுநம
தூருக் குவடு விளைத்தன வேயின் றொழிவறவே.
(6)
ஒழியாக் கவலை யொழிவதென் றோசொல் லுழல்புலத்தின்
வழியாக் கவலை யிடைப்படு மானின் மயங்கிநின்று
பழியாக் கவலை மனமே பணிந்து பரவிலைவேல்
விழியாக் கவலை மகளிறை தாழ்பழ வெற்பினையே.
(7)
வெற்றிக்கு மாரனை யீன்ற பழமலை வேந்தனின்னும்
முற்றிக்கு மாரனை நோக்குங்கொ லோவென்பர் மூலைவம்புச்
சொற்றிக்கு மாரநை வார்மட வாரவன் றோண்முலையோ
டொற்றிக்கு மாரனை யோன்முனஞ் சேர வுழலுவரே.
(8)
உழவரைச் சந்த விளவாளை பாய்வய லோங்குகுன்றைக்
கிழவரைச் சந்த தமுநினை வாய்நற் கிளைவளரும்
பழவரைச் சந்த நறுந்தழை வாங்கிப் பரவினடூள்
எழவரைச் சந்த மயிலியல் பூசவு மெண்ணினளே.
(9)
எண்ணிவ ருந்தின நொந்தோம் பழமலை யெய்திலர்ள
னண்ணிவ ருந்தின மின்றே யினிக்கதிர் நற்புரவி
மண்ணிவ ருந்தின மாவா லெழுந்துகள் வந்துடலின்
கண்ணிவ ருந்தின வான்மதி றேய்க்குங் கடிநகரே.
(10)

6. மேரு குவடு-மேருமலை. உவள்-இப்பெண். துவசம்-கொடிகள். வடு-மாவடு. நீர் உக்கு-நீரைச் சொரிந்து. எழில்மாய்ந்து-அழகழிந்து. வடுவிளைத்தாள்-வசையை உண்டாக்கினாள். 7. உழல் புலத்தின் வழி-சுழன்று திரியும் ஐம்புலவழியே. யாக்க-கட்ட. பழி ஆக்க வல்லை-பழியை உண்டாக்கவல்லாய். பரவிலை-போற்றினாயில்லை. 8. முற்று இக்குமாரன்-முதிர்ந்த கரும்புவில்லையுடைய காமன். மூலை வம்புச் சொல்-மறைவாகப் பேசும் பழிச்சொல். திக்கும் ஆரநைவார்-எல்லாத் திக்குகளினும் பரவ அதனால் வாடுவர். ஒற்றிக் குமார்-பொருந்தும்படி. அனையோன்-அப்பழமலைநாதர். 9. குன்றை கிழவர்-பழமலை நாதர். கிளை வளரும்-மூங்கில்கள் வளருகின்ற. சந்ததமும்-எப்பொழுதும். பழவரை-பழமலை. சந்த நறுந்தழை-சந்தன இலை. 10. மண் இவர் உந்தின மாவால் எழும் துகள்-நிலத்திலே தலைவராற் செலுத்தப்பட்டுவரும் குதிரைக் குளம்பால் எழுகின்ற தூளிகள். கான்நண்ணி-காட்டு வழியே பொருந்தி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்