| 4. பழமலையந்தாதி |
|
| |
கடிக்கஞ் சமனை யுவந்துல காக்குறுங் காரணனோர் முடிக்கஞ் சமனை தொறும்பலி யேற்ற முதுகிரியான் மிடிக்கஞ் சமனை வருந்தொழ வாழ்வும் விரவுறுமெங் குடிக்கஞ் சமனை வெருவுத லேயின்று கொல்வனென்றே.
|
(11) |
| |
| |
கொல்லைக் குறவரை வாயனை யார்க்கரிக் கோட்டைவிளை நெல்லைக் குறவரை யாதுகொள் காளத்தி நேயரைவான் தில்லைக் குறவரை நம்முது குன்றரைச் சேர்வலென்றூர் எல்லைக் குறவரை மாத்திரைக் கேநல மீகுவரே.
|
(12) |
| |
| |
ஈகையி லங்கை தவமுள மெங்ஙன மெய்துவமென் றோகையி லங்கை வடிவே லொடுவருந் தோன்றறந்தை வாகையி லங்கை யரசிற வூன்றிய வள்ளன்மழு மாகையி லங்கைம் முகமுது குன்றன் மலர்ப்பதமே.
|
(13) |
| |
| |
பதம்பர வைக்கு வருந்துபி ராற்குப் பசுமயின்மேற் கதம்பர வைக்கு வரச்சுற்று கட்செவிக் கங்கணற்குச் சிதம்பர வைக்கு முதுகுன்ற வாணற்குச் செல்வமெல்லா மதம்பர வைக்கு நிகர்கரித் தோறலை மாலைகளே.
|
(14) |
| |
|
| |
11. கடிகஞ்சம்-மணம் பொருந்திய தாமரை. மனை-வீடு. உல்கு ஆக்குறும்-உலகைப் படைக்கும். ஓர்முடி-ஒருதலை. முதுகிரியான்-பழமலையான். கஞ்சம்-வெண்கலப்பாத்திரம். மிடிக்கு அஞ்சம்-வறுமைக்குப் பயப்படமாட்டோம். கஞ்சம், ஐயக்கடிஞையை உணர்த்துவதால் ஆகுபெயர். 12. வாய் அனையார்-வாய்ந்தவேட மங்கையர். கரிக்கோட்டை-யானைக்கொம்பை. குற-குற்றுதற்கு. குற-இடைக்குறை. வரையாது கொள்-நீக்காமல் கொள்ளுகின்ற. உறவர்-உறவாக இருப்பவர். 13. கைதவம்-வஞ்சனை. வாகை இலங்கைஅரசு இற-வெற்றிமாலையை அணிந்த இராவணன் இற்றுவிழ. மழு-பரசு. மா-மான். 14. பதம்-அடி. பரவை-பரவை நாச்சியார். கதம்பர்-கடம்பமாலையை அணிந்தவர். கட்செவி கங்கணற்கு-பாம்புக் காப்பை யுடையவனுக்கு. சிதம்பர ஐ-சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தலைவர். மதம்-மதநீர். பரவைக்கு நிகர்-கடலுக்கு ஒப்பு. கரித்தோல்-யானைத்தோல்.
|
|
|
|