| "சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று |
| பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி" |
| - 12. தில்லைவாழந்தணர் - 2. |
| "இன்பனாய்த் துன்பங் களைகின்றானே" |
| (6. 38 - 6) |
| "கற்றிருந்த கலைஞானம் ஆனாய் நீயே" |
| (6. 38 - 6) |
| "மன்னிய மங்கை மணாளா போற்றி" |
| (6. 57 - 5) |
| | "மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி" | | (6. 32 - 8) | |
எல்லாம் வல்ல இறைவன் சிறப்புக் குணங்கள் ஆறு என்ப. அவை வருமாறு : 1. பெண்மை, 2. ஆண்மை, 3. வண்மை, 4. எண்மை, 5. உண்மை, 6. திண்மை, (ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்). இவை பகம் என்னும் பெயரால் வழங்கப்படும். இவ்வுண்மை வருமாறு :
| "ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை |
| இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே |
| கூவியம ருலகனைத்து மூருவிப் போகக் |
| குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும் |
| தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை |
| சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க் |
| கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த |
| குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே." |
| - 6. 75 - 10. |
சிவனாரின் உண்மைத் தன்மை வருமாறு :
| "சிவனரு உருவு மல்லன் சித்தினோ டசித்து மல்லன் |
| பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடு வானு மல்லன் |
| தவமுத லியோக போகந் தரிப்பவன் அல்லன் தானே |
| இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பி னானே." |
| - சிவஞானசித்தியார், 1. 3 - 11. |
(1)
மண்ணாதி ஐந்தொடு புறத்திலுள கருவியும் | வாக்காதி சுரோத்ராதியும் | வளர்கின்ற சப்தாதி மனமாதி கலையாதி | மன்னுசுத் தாதியுடனே | தொண்ணூற்றொ டாறுமற் றுள்ளனவும் மௌனியாய்ச் | சொன்னவொரு சொற்கொண்டதே | தூவெளிய தாயகண் டானந்த சுகவாரி | தோற்றுமதை என்சொல்லுவேன் |