துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்கர்ம | துட்டதே வதைகளில்லை | துரியநிறை சாந்ததே வதையாம் உனக்கே | தொழும்பன்அன் பபிடேகநீர் | உள்ளுறையி லென்னாவி நைவேத்தி யம்ப்ராணன் | ஓங்குமதி தூபதீபம் | ஒருகால மன்றிது சதாகால பூசையா | ஒப்புவித் தேன்கருணைகூர் | தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே | தெளிந்ததே னேசீனியே | திவ்யரச மியாவுந் திரண்டொழுகு பாகே | தெவிட்டாத ஆனந்தமே | கள்ளன்அறி வூடுமே மெள்ளமௌ வெளியாய்க் | கலக்கவரு நல்லஉறவே | கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு | கருணா கரக்கடவுளே. |