பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


144


     (வி - ம்) கர்மம் - வினை. மதி - அறிவு. கைவல்லியம் - வீடுபேறு. மருட்டுதல் - மயக்குதல். வித்தை - கல்வி.

    வினையின் தன்மையினை வருமாறுணர்க :

"தன்மமோ டதன்ம மாகித் தானிரு பயனுந் தந்து
 நன்மைதீ மையினும் இன்பத் துன்பினு நாடிக் காண
 முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத் தொன்ற தாகிக்
 கன்மும் மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும்."
- சிவஞானசித்தியார், 2. 2 - 36
    பிறரை மருட்டி வெருட்டி வெல்லுமாறு கற்கும் கல்வி மெய்ந்நூற் கல்வியாகாது. மெய்ந்நூற்கல்வியெனினும் பதிநூற் கல்வியெனினும் ஒன்றே. எனைய பசுநூற் கல்வியெனினும் உலகியற்கல்வி யெனினும் ஒன்றே. இவற்றைச் சிறப்புக்கல்வி யென்றும், பிறப்புக்கல்வி யென்றும் கூறுப. உலகியற்கல்வி வருமாறுணர்க :

"எச்சனைத் தலையைக் கொண்டு செண்டடித் திடபம் ஏறி
 அச்சங்கொண் டமரர் ஒட நின்ற அம் பலவற் கல்லாக்
 கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசு நூல் கற்கும்
 பிச்சரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்க ளோடே.'
- 1. திருமாளிகைத்தேவர், 4. 1.
    ஆரியவேதம் - பசுநூல் எனப்படும். தமிழ்மறை - பதிநூல் எனப்படும். அவ்வுண்மை வருமாறு :

"அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும்
    அதுபோலன் றிதுவென்று முளதா முண்மைப்
 பரபதமும் தற்பரமும் பரனே யன்றிப்
    பலரில்லை றென்றெழுதும் பனுவல் பாரின்
 எரியினிடை வேவாதாற் றெதிரே யோடும்
    என்புக்கு முயிர்கொடுக்கு மிடுநஞ் சாற்றுங்
 கரிவையவளை விக்குங்கன் மிதக்கப் பண்ணும்
    கராமதலை கரையிலுறக் காற்றுங் காணே."
- திருமுறைகண்டபுராணம், 17.
"இறையுண்மையில்லார் இறையுயிரே என்பார்
 இறைகோலம் போற்றியை பில்லார்."
 இறையுண்மை யில்லார்-புறப்புறச்சமயத்தார்
 இறையுயிரே என்பார்-புறச்சமயத்தார்
 இறைகோலமே என்பார்-அகப்புறச் சமயத்தார்
 திருவடிப்பேற்றின் பொருத்த முணரார்-அகச்சமயத்தார்.
(10)