பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


161


    மலச்சார்பும் ஒட்டின்கண் அருண் கலச்சார்பும் உள்ளன. இவ்வுண்மைகள் வருமாறுணர்க:

"சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச்
 சார் தரா சார்தரு நோய்,"
- திருக்குறள் 359.
"சார்புணர்ந்து சார்பு கெட வொழுகின் என்றமையால்
 சார்புணர்தல் தானே தியான முமாம் - சார்பு
 கெடவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
 படவருவ தில்லைவினைப் பற்று,"
- திருக்களிற்றுப்படியார், 34.
"அறிந்திடும் ஆன்மா ஒன்றை ஒன்றினால் அறித லானும்
 அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும்1
 அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே
 அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவன் அன்றே."
- சிவஞானசித்தியார், 5. 2-2.
சிவகுருவின் மெய்ம்மை வருமாறு :

"சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
 தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
 பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்
 அத்தன் இவனென் றடிபணி வாரே"
- 10. 1553.
உடல் பொருள் ஆவிகளை உடையான்பால் ஒப்புவிக்கு முண்மை வருமாறு :

"அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
 குன்றே அனையாய் என்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ
 இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்டோண் முக்கண்எம்மானே
 நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே."
- 8. குழைத்தபத்து - 7.
    இம் முறையான் மேவிச் செய்யும் ஆவியின் செயலெலாம் தாவில் முதல்வன் தன்செயலே யென்பது வருமாறு :

'இவனுலகில் இதமகிதம் செய்த எல்லாம்
 இதமகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்
 அவனிவனாய் நின்றமுறை யேக னாகி
 அரன்பணியின் நின்றிடவும் அகலும் குற்றம்
 1. 
'அறிந்தும்', சிவஞானபோதம், 3, 6 - 1. 'தனக்கென.' சிவப்பிரகாசம், 64.