பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


163


     "கன்னிகை . . . அதுபோல் - மங்கைப்பருவம் எய்தாத கன்னிப் பெண்ணொருத்தி (மெய்ம்மையாகப் பலராலும் விழைந்து நுகர்ந்து வரும்) சிற்றின்பத்தினை (பருவமின்மையால்) கசக்கும் வேம்பென வெறுத்து மொழிவள்; (அவளே மங்கைப்பருவ மெய்தித் திருவருளால்) கணவனுடன் திருமணமுறையாற் கூடி இல்வாழ்வேற்று இன்புற்று வருங்கால், அவ்வின்பமே பேரின்பமென அவட்குத் தோன்றுதலால், முன்னம் என்னமொழிந்தோம் என்று நினைந்து அடங்காச் சிரிப்பெய்துவள்; அதுபோல்;

    "சொன்னபடி . . . சுகவாரியே" - சொன்னபடி கேட்டு நடக்கும் அறிவில்லாத அடியேனுக்கு, நின்னுடைய பேரருட் பெருக்கு உளதாயின், நீங்காப்பேரின்பத் தோற்றம் ஓங்கும். முக்குணச்சார்பில்லாத நன்மைக்கு மேலான விழுமிய முழுமுதலே பேரொளிப்பிழம்பே பேரின்பப் பெருங்கடலே!

     (வி - ம்) இன்-இனிய: ருசித்திட - சுவைகொள்ள. அனுபூதி - மெய்யுணர்வி; மெய்ப்பொருளை மெய்யுணர்விற் கொண்டமேலோன். கன்னி - மங்கைப்பருவம் எய்தா நங்கை. சுகம் - இன்பம். ஆரம்பம் - தொடக்கம். வாரி - கடல்.

கன்னிகையொப்பினை வருமாறுணர்க :

"கருவிகழிந் தாற்காணார் ஒன்றும் எனிற் காணார்
    காணாதார் கன்னிகைதான் காமரதங் காணாள்
  மருவிஇரு வரும்புணர வந்த இன்பம்
    வாயினாற் பேசரிது மணந்தவர் தாம் உணர்வர்
  உருவின்உயிர் வடிவதுவும் உணர்ந்திலர்காண் சிவனே
    உணராதார் உணர்வினால் உணர்வதுகற்ப னைகாண்
  அருள்பெறின்அவ் விருவரையும் அறிவிறந் தங்கறிவர்
    அறியாரேற் பிறப்பும்விடா தாணவமும் அறாதே."
- சிவஞானசித்தியார், 8. 3 - 1.
    செவ்விவாராமுன்னும் செவ்வி வந்த பின்னும் உள்ள நிலைமை, வருமாறு : "கன்னிகையொருத்தி சிற்றின்பம் வேம் பென்னினும் கைக்கொள்வள்1 பக்குவத்தில், கணவனருள் பெறின், முன்னே சொன்ன வாறென்னெனக்கருதி நனவாவள்

    உண்மை யுணர்ந்துவப்பன். இது,

"தற்பர மல்ல சதாசிவன் தானல்ல
 நிட்கள மல்ல சகள நிலையனல்ல
 அற்புதமாகி யநுபோகக் காமம்போற்
 கற்பனை யின்றிக் கலந்துநின் றானே."
- 10. 2903.
(1)
 1. 
'முகத்துக்கண்' 10. 2904.