பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

181
துன்பத்தில் அடியேனை அழுத்திவிடுதல் நின் அந்தண்மைக்கு அற முறையாகுமோ?

         "சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -

     (வி - ம்.) கருணை - அந்தண்மை. இதயம் - நெஞ்சம்; மனம். மலைவு - முரண்; மாறுபாடு; விரோதம். பந்தம் - தீப்பந்தம். பதைபதைத்தல் - நடுநடுங்கல். பரமசுகம் - மேலான சுகம்; பேரின்பம். தேகம் - உடம்பு. உடை கப்பல் - உடைந்த கப்பல். கப்பல் - நாவாய். திரை - அலை. ஆழி - கடல். சொந்தம் - உரிமை.

    ஆவி இறைவனுக்கு முழு உரிமை என்னும் உண்மை வருமாறு :

"விற்றுக் கொள்வீ ரொற்றி யல்லேன் விரும்பி யாட்பட்டேன்
 குற்றமொன்றுஞ் செய்ததில்லை கொத்தை யாக்கினீர்
 எற்றுக்கடிகே ளென்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
 மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே"
- 7. 65 - 2.
(11)
 
எந்நாளும் உடலிலே உயிராம் உனைப்போல்
    இருக்கவிலை யோமனதெனும்
  யானுமென் நட்பாம் பிராணனும் எமைச்சடம
    தென்றுனைச் சித்தென்றுமே
அந்நாளி லெவனோ பிரித்தான் அதைக்கேட்ட
    அன்றுமுதல் இன்றுவரையும்
  அநியாய மாயெமை யடக்கிக் குறுக்கே
    அடர்ந்தரசு பண்ணிஎங்கள்
முன்னாக நீஎன்ன கோட்டைகொண் டாயென்று
    மூடமன மிகவும்ஏச
  மூண்டெரியும் அனலிட்ட மெழுகா யுளங்கருகல்
    முறைமையோ பதினாயிரஞ்
சொன்னாலும் நின்னரு ளிரங்கவிலை யேஇனிச்
    சுகம்வருவ தெப்படிசொலாய்
  சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
    சோதியே சுகவாரியே.
     (பொ - ள்) "எந்நாளு . . . பிரித்தான்" - (ஆவியைப் பார்த்துப் படைப்புத் தொட்டு உடனாய் நிற்கும்) மனமானது ஏ ஆவியே! எக் காலத்தும் இவ்வுடலகத்து உன்னைப்போல் யானும், என் உயிர் நண்பனாகிய