அதனாலேயே நினைத்தபோதெல்லாம் பாடம் சொல்ல வல்லனாகின்றான். அதனால் அவன் வேறு, பாடம் வேறு என்று சொல்லுவதற்கில்லை. ஆயினும் இரண்டற்ற ஒனறாம் புணர்ப்பன்றி ஒன்றழிந்தொன்று நிற்பதுமன்று. இரண்டும் வேறுவேறாக நிற்பதுமன்று. புணர்ப்பதாக நிற்பதெனப் புலன் கொள்க. வருமாறுணர்க:
| பாடமனங் கொண்டோனப் பாடமாய் நிற்பதுபோல் |
| நாடரிய பாவனையும் நாடு. |
பாவகப் பேற்றினை வருமாறுணர்க :
| "கண்டஇவை அல்லேன்நான் என்றகன்று காணாக் |
| கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த |
| தொண்டினொடும் உளத்தவன்தான் நின்றகலப் பாலே |
| சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி |
| விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால் |
| விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும் |
| பண்டைமறை களும்அதுநான் ஆனேன் என்று |
| பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே." |
| - சிவஞானசித்தியார். 9. 3 - 1. |
| ஒன்றினுள் ளாகியவ் வொன்றின்வழி நிற்பதாம் |
| நின்றவது நானானேன் நீடு. |
கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டையென்னும் நான்கும் முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நாற்படியின் நான்மைத் தொடர்பென்ப.
ஆற்றில் மூழ்குவோன் அவ்வாற்று நீராலேயே மூழ்குவிக்கப்படுகின்றனன் என்னும் உண்மைபோல ஆவியும் திருவருளாலேயே பாவனை புரியும் என்பது வருமாறு :
| "பாவிக்கின் மனாதி வேண்டும் பயனிலை கரணம் நீத்துப் |
| பாவிப்பன் என்னில் என்ன பழுதுள பாவ கத்தால் |
| பாவிக்க ஒண்ணா னென்று பாவிப்பன் 1என்னின் நீயென் |
| பாவிக்க வேண்டா ஆண்ட பரனருள் பற்றி னோர்க்கே." |
| - சிவப்பிரகாசம், 86. |
(3)
சொல்லான திற்சற்றும் வாராத பிள்ளையைத் | தொட்டில்வைத் தாட்டிஆட்டித் | தொடையினைக் கிள்ளல்போற் சங்கற்ப மொன்றில் | தொடுக்குந் தொடுத்தழிக்கும் |
1. | 'பாவகமேற்' சிவஞானபோதம், 6. 2 - 2. |