பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

191
பூவை - பெண்; மனைவி. புறம் - வெளி. சஞ்சரிக்கும் - சுற்றித்திரியும். அணு - மண்; துகள். கபடம் - வஞ்சனை. சாலம் - மாயவித்தை. ஏழை - அறிவில்லாதவன். வசம் - வழிப்படுத்தல்.

     ஆவி தொன்மையிலேயே மலப்பிணிப்புற்றுக் கிடந்த நிலை, பிள்ளை சொல்லானதிற் சற்றம் வாராத நிலை. அவ்ஆவிக்கு மாயா காரிய உடம்பினைக் கொடுத்துதவல்; தொட்டிலில் வைத்தாட்டல், கிள்ளி விடுதல், ஆவிகளைக் கருவிகளுடன் சேர்த்துத் தொழிற்படுத்தல். சங்கற்பம் என்பது அகப்புறக் கருவியாகிய அந்தக்கரணங்களுடன் கூட்டுதல். சப்தபூமியென்பது அவத்தையாகிய நிலைகளிற் செலுத்துதல். அடங்காத பூவை என்பது திருவருளில் கட்டுப்படாதலைதல். மிக்க வன்மைகாட்டல் என்பது சிற்றுணர்வால் மலத்தடிப்பாதல். அணுவாச் சுருக்கல் என்பது சிற்றுணர்வாயிருத்தலென்றலும் ஒன்று.

     தொட்டிலில் வைத்து ஆட்டுதலும், தொடையைக் கிள்ளுதலும் வினைக்கீடாக நினைப்பு மறப்பும் திருவருளாற்றலாலேயே வரும் உண்மை வருமாறு :

"நின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்
 பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி
 உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்
 என்னையொப் பாருள ரோசொல்லு வாழி இறையவனே."
- 4. 113 - 4.
(4)
 
கண்ணார நீர்மல்கி யுள்ளநெக் குருகாத
    கள்ளனே னானாலுமோ
  கைகுவித் தாடியும் பாடியும் விடாமலே
    கண்பனித் தாரைகாட்டி
அண்ணா பரஞ்சோதி யப்பா உனக்கடிமை
    யானெனவு மேலெழுந்த
  அன்பாகி நாடக நடித்ததோ குறைவில்லை
    அகிலமுஞ் சிறிதறியுமேல்
தண்ணாரு நின்னதரு ளறியாத தல்லவே
    சற்றேனும் இனிதிரங்கிச்
  சாசுவத முத்திநிலை ஈதென் றுணர்த்தியே
    சகசநிலை தந்துவேறொன்
றெண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கவே
    ஏழையேற் கருள்செய்கண்டாய்
  இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
    எங்குநிறை கின்றபொருளே.