பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ | பத்திநெறி யில்லைவேத | பாராய ணப்பனுவல் மூவர்செய் பனுவலது | பகரவோ இசையுமில்லை | யோகத்தி லேசிறிது முயலவென் றால்தேகம் | ஒவ்வாதி வூண்வெறுத்தால் | உயிர்வெறுத் திடலொக்கும் அல்லாது கிரியைகள் | உபாயத்தி னாற்செய்யவோ | மோகத்தி லேசிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான | மோனத்தில் நிற்கஎன்றால் | முற்றாது பரிபாக சத்திக ளனேகநின் | மூதறிவி லேஎழுந்த | தாகத்தி லேவாய்க்கும் அமிர்தப் பிரவாகமே | தன்னந் தனிப்பெருமையே | சர்வபரி பூரண அகண்டதத் துவமான | சச்சிதா னந்தசிவமே. |