நில்லாத ஆக்கைநிலை யன்றனவே கண்டாய் | நேயஅருள் மெய்யன்றோ நிலயமதா நிற்கக் | கல்லாதே ஏன் படித்தாய் கற்றதெல்லாம் மூடங் | கற்றதெல்லாம் மூடமென்றே கண்டனையும் அன்று | சொல்லாலே பயனில்லை சொல்முடிவைத் தானே | தொடர்ந்துபிடி மர்க்கடம்போல் தொட்டதுபற் றாநில் | எல்லாரும் அறிந்திடவே வாய்ப்பறைகொண்டடிநீ | இராப்பகலில் லாவிடமே எமக்கிடமென் றறிந்தே. |