60 | பொருந்திய இன்பம் பொழிசிற் சுகோதயம் |
| எங்கணும் நிறைந்த இயல்பினை எனக்குச் |
| செங்கையால் விளங்கத் தெரித்தமெய்த் தேசிகன் |
| தன்னையறி வித்துத் தற்பர மாகி |
| என்னுளத் திருந்தருள் ஏக நாயகன் |
65 | அடிமுடி இல்லா அரும்பொருள் தனக்கு |
| முடியடி இதுவென மொழிந்திடும் முதல்வன் |
| மெய்யலான் மற்றவை மெய்யல வெல்லாம் |
| பொய்யென அறியெனப் புன்னகை புரிந்தோன் |
| அருளும் பொருளும் அபேதமா யிருந்தும் |
70 | இருதிற னென்னும் இயலுமுண் டென்றோன் |
| அருளுனக் குண்டேல் அருளும் வெளிப்படும் |
| பொருள்மயந் தானே பொருந்துமென் றுரைத்தோன் |
| சத்தசத் திரண்டு தன்மையுந் தானே |
| ஒத்தலாற் சதசத் துனக்கென உரைத்தோன் |
75 | ஆணவம் அறாவிடின் அருளுறா தென்னக் |
| காணரு நேர்மையாற் காணவே உரைத்தோன் |
| சென்மமுள் ளளவுந் தீரா திழுக்குங் |
| கன்மம் விடாதெனக் காட்டிய வள்ளல் |
| உளதில தெனவும் உறுதலான் மாயை |
80 | வளமில தெனவும் வகுத்தினி துரைத்தோன் |
| இல்லறத் திருந்தும் இதயம் அடக்கிய |
| வல்லவன் தானே மகாயோகி என்றோன் |
| துறவறத் திருந்துஞ் சூழ்மனக் குரங்கொன் |
| றறவகை யறியான் அஞ்ஞானி என்றோன் |
85 | இறவா மனந்தான் இறக்க உணர்த்திப் |
| பிறவா வரந்தரும் பேரறி வாளன் |
| அத்தன தருளால் அனைத்தையும் இயக்குஞ் |
| சுத்தமா மாயையின் தோற்றமென் றுரைத்தோன் |
| இருள்மல மகல இசைந்ததில் அழுந்தும் |
90 | பொருளருட் டிரோதைப் பொற்பெனப் புகன்றோன் |
| வீறு சிவமுதல் விளம்பிய படியே |
| ஆறு மநாதிஎன் றறிஞருக் குரைப்போன் |
| கொல்லா விரதங் குவலயத் தோர்கள் |