பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

696
 
தில்லைப் பொதுவில் திருநடத் தெய்வம்
 
வாதவூர் எந்தையை வரிசையாய் விழுங்கும்
 
போதவூர் மேவுகர்ப் பூர விளக்குச்
 
சுகரை அகண்டத் தூவெளி எல்லாந்
 30
திகழவே காட்டுஞ் சின்மய சாட்சி
 
செழுந்தமிழ் அப்பரைச் சிவலிங்க மாகி
 
விழுங்கிய ஞான வித்தக வேழம்
 
எழில்தரு பட்டினத் திறைவரை யென்றும்
 
அழிவிலா இலிங்க மாக்கிய அநாதி
 35
சாந்த பூமி தண்ணருள் வெள்ளம்
 
ஆர்ந்த நீழ லசையாக் ககனம்
 
பரவுவார் நெஞ்சிற் பரவிய மாட்சி
 
இரவுபக லற்ற ஏகாந்தக் காட்சி
 
ஆட்சிபோ லிருக்கும் அகிலந் தனக்குச்
 40
சாட்சியா யிருக்குந் தாரகத் தனிமுதல்
 
ஆணும் பெண்ணும் அலியுமல் லாததோர்
 
தாணுவாய் நின்ற சத்தாந் தனிச்சுடர்
 
எள்ளும் எண்ணெயும் எப்படி அப்படி
 
உள்ளும் புறம்பும் உலாவிய ஒருபொருள்
 45
அளவிலா மதந்தொறும் அவரவர் பொருளென
 
உளநிறைந் திருக்கும் ஒருபொற் பணிதி
 
துள்ளு மனப்போய் துடிக்கத் தறிக்கக்
 
கொள்ளு மோனவாள் கொடுத்திடு மரசு
 
பெரிய பேறு பேசாப் பெருமை
 50
அரிய உரிமை அளவிலா அளவு
 
துரிய நிறைவு தோன்றா அதீதம்
 
விரியுநல் லன்பு விளைத்திடும் விளைவு
 
தீராப் பிணியாஞ் செனன மறுக்க
 
வாரா வரவாய் வந்தசஞ் சீவி
 55
ஆலைக் கரும்புபா கமுதக் கட்டிநீள்
 
சோலைக் கனிபலாச் சுளைகத லிக்கனி
 
பாங்குறு மாங்கனி பால்தேன் சருக்கரை
 
ஓங்குகற் கண்டுசேர்த் தொன்றாய்க் கூட்டி
 
அருந்திய ரசமென அறிஞர் சமாதியில்