பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


695


திருச்சிற்றம்பலம்தாயுமானவடிகள் மாணாக்கர் அருளையர் அவ்வடிகளைத் தொழுதஅருள்வாக்கிய அகவல்

 
திருவளர் கருணைச் சிவானந்த பூரணம்
 
ஒருவரும் அறியா ஒருதனிச் சித்து
 
நவந்தரு பேதமாய் நாடக நடித்துற்
 
பவந்தனை நீக்கிப் பரிந்தருள் பராபரம்
 5
கண்ணுங் கருத்துங் கதிரொளி போல
 
நண்ணிட எனக்கு நல்கிய நன்மை
 
ஒன்றாய்ப் பலவாய் ஒப்பிலா மோனக்
 
குன்றாய் நிறைந்த குணப்பெருங் குன்றம்
 
மண்ணையும் புனலையும் வளியையும் கனலையும்
 10
விண்ணையும் படைத்த வித்திலா வித்துப்
 
பந்த மனைத்தையும் பாழ்பட நூறிஎன்
 
சிந்தையுட் புகுந்த செழுஞ்சுடர்ச் சோதி
 
விள்ளொணா ஞானம் விளங்கிய மேலோர்
 
கொள்ளைகொண் டுண்ணக் குறைவிலா நிறைவ
 15
தாட்டா மரைமலர்த் தாள்நினைப் பவர்க்குக்
 
காட்டா இன்பங் காட்டிய கதிநிலை
 
வாக்கான் மனத்தான் மதித்திட அரிதென
 
நோக்கா திருக்க நோக்கிய நோக்கம்
 
ஆதியாய் அறிவாய் அகண்டமாய் அகண்ட
 20
சோதியாய் விரிந்து துலங்கிய தோற்றம்
 
பரவெளி தன்னிற் பதிந்தஎன் னுளத்தின்
 
விரவி விரவி மேற்கொள்ளும் வெள்ளம்
 
சுட்டுக் கடங்காச் சோதி யடியார்
 
மட்டுக் கடங்கும் வான்பெருங் கருணை
 25
எல்லைக் கடங்கா ஏகப் பெருவெளி