பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


153


கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதன் முகம்மனே."
- 2. 52 - 2.
"கூறும் நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம் நீ
 தேறும் வகைநீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ
 வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை யுன்னை விரித்துரைக்கில்
 தேறும் வகையென் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ.
- 8. ஆத்துமநிவேதனம், 5.
"தவனே யுலகுக்குத் தானே முதறான் படைத்தவெல்லாஞ்
 சிவனே முழுதுமென் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய
 அவனே யடல்விடை யூர்தி கடலிடை நஞ்சமுண்ட
 பவனே யெனச்சொல்லு வாரும் பெறுவரிப் பாரிடமே."
- 11. சேரமான், பொன்வண் 5.
"நாமல்ல இந்திரியம் நம்வழியின் அல்லவழி
 நாமல்ல நாமும் அரனுடைமை - யாமென்னின்
 எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை
 முற்செய்வினை யுந்தருவான் முன்."
- சிவஞானபோதம், 10. 2 - 1.
(5)
காராரும் ஆணவக் காட்டைக் களைந்தறக்
    கண்டகங் காரமென்னுங்
  கல்லைப் பிளந்துநெஞ் சகமான பூமிவெளி
    காணத் திருத்திமேன்மேல்
பாராதி யறியாத மோனமாம் வித்தைப்
    பதித்தன்பு நீராகவே
  பாய்ச்சியது பயிராகு மட்டுமா மாயைவன்
    பறவையணு காதவண்ணம்
நேராக நின்றுவிளை போகம் புசித்துய்ந்த
    நின்னன்பர் கூட்டமெய்த
  நினைவின் படிக்குநீ முன்னின்று காப்பதே
    நின்னருட் பாரமென்றும்
ஆராரும் அறியாத சூதான வெளியில்வெளி
    யாகின்ற துரியமயமே
  அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
    ஆனந்த மானபரமே.