கல்லேனும் ஐயவொரு காலத்தில் உருகுமென் | கல்நெஞ்சம் உருகவிலையே | கருணைக் கிணங்காத வன்மையையும் நான்முகன் | கற்பிக்க வொருகடவுளோ | வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு | வழக்குக் கிழுக்குமுண்டோ | வானமாய் நின்றின்ப மழையா யிறங்கிஎனை | வாழ்விப்ப துன்பரங்காண் | பொல்லாத சேயெனில் தாய்தள்ளல் நீதமோ | புகலிடம் பிறிதுமுண்டோ | பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட் கயலுமாய்ப் | புன்மையே னாவனந்தோ |