பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

199
நல்லின்பம் துய்த்து1 நாளும் போக்குகின்றோம்; இங்ஙனமிருந்தால் நின் திருவடிக்கு ஆளாம் உய்தியினை அடைவது எங்ஙனம்? திருவாய் மலர்ந்தருள்வாயாக;

         "இகபரமிரண் . . . பொருளே" -

     (வி - ம்.) மரவுரி - மரப்பட்டை, வனம் - காடு. முதிர் - முதிர்ந்த. சருகு - உலர்ந்த இலை, சிரம் - உச்சி. அபேச்சை - விருப்பம்.

     அறுசுவை: கைப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு. மூலத்திடம் - குறியின் இரண்டங்குலத்திற்குக் கீழிருக்குமிடம்.

(9)
 
முத்தனைய மூரலும் பவளவா யின்சொலும்
    முகத்திலகு பசுமஞ்சளும்
  மூர்ச்சிக்க விரகசன் னதமேற்ற இருகும்ப
    முலையின்மணி மாலைநால
வைத்தெமை மயக்கிஇரு கண்வலையை வீசியே
    மாயா விலாசமோக
  வாரிதியி லாழ்த்திடும் பாழான சிற்றிடை
    மடந்தையர்கள் சிற்றின்பமோ
புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத
    பொன்னாட்டும் வந்ததென்றால்
  போராட்ட மல்லவோ பேரின்ப முத்திஇப்
    பூமியி லிருந்துகாண
எத்தனை விகாதம்வரும் என்றுசுகர் சென்றநெறி
    இவ்வுலகம் அறியாததோ
  இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
    எங்குநிறை கின்றபொருளே.
     (பொ - ள்) "முத்தனைய . . . வீசியே" - (தென்பாண்டிநாட்டுக் கொற்கைத் துறையில் கிடைக்கும்) வெள்ளிய திரண்ட பெரியமுத்தை யொத்த பல்வரிசையும் பவழம்போன்ற செவ்விய இதழ்களையுடைய வாயினின்றும் வெளிப்படும், தேனினும் இனிய இன்சொல்லும், (நிறை மதிக்கொப்பாகிய) முகத்தின்கண் பொன்போலிலங்கும் பசுமஞ்சளும், (கண்டார் மயங்கி) மூர்ச்சிக்கும்படி மினுக்கி (அதனால்) காமவெறி எனப்படும் விரகசன்னதம் தலைக்கேறும்படி செய்ய (மலைநிகரான) இரண்டு மணியழுத்திய அழகிய பொற்குடத்தினையொத்த முலையின்

 
 1. 
'புண்ணிய.' 11. திருவிடைமும்மணி - 19.