"யோகபரன் . . . . . . என்கொலோ" - (நன்னெறி நாற்படியுள்) அடியேன் மூன்றாவது படியாகிய செறிவெனப்படும் சிவயோகம் கைவரப்பட் டின்புற்றிருக்கும் யோகபரன் ஆகாமல் அறிவில்லாத குடும்பனாகித் தேடவேண்டிய பெரும் பொருளைப் பாடுபட்டுத் தேடாமல் உள்ளபொருளையும் செலவு செய்யும் படியான அறிவுண்டாயிற்று. இதற்குக் காரணம் யாதோ? (அறிகிலேன்.)
"தேடரிய . . . ஆனந்தமே" -
(வி - ம்.) ஓய்தல் - முடிதல்; ஒடுங்குதல். விசை - சுழலும் ஆற்றல். கோடாது - பிழையாது. இன்பாதீதம் - மேலான இன்பம்; பிறர்க்கு எட்டாதவின்பம். சாந்தம் - அமைதி. வெளி - ஆகாயம். ஆறுவீடுகள் - மூலாதாரமுதல் சொல்லப்படும் ஆறிடங்கள். அவை மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பன.
பொருள்: மெய்ப்பொருளாகிய சிவன். அவனைத்தேடுதல் இடையறா நினைவுட னிருத்தல். தேடாமை - சிவன்நினைவு கொள்ளாமை. மன்னு சிவனினைவு மாறாமை தேடல்பொருள், உன்னலிலல் தேடாமை யோர்.
(4)
1. | 'அங்கித்தம்'. சிவஞானசித்தியார், 10. 2 - 4. |