பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

255
     கடவுளின் தொடர்பு யாண்டுமாம் உண்மை வருமாறு :

"ஈசனுக் கன்பில்லார் அடியவர்க் கன்பில்லார்
    எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்குமன் பில்லார்
 பேசுவதென் அறிவில்லாப் பிணங்களைநாம் இணங்கிற்
    பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடுநீ
 ஆசையொடும் அரன்அடியார் அடியாரை அடைந்திட்
    டவர்கருமம் உன்கருமம் ஆகச் செய்து
 கூசிமொழிந் தருள்ஞானக் குறியில் நின்று
    கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே."
சிவஞானசித்தியார், 12. 2 - 1.
     பத்திமிக்கார் பண்பாகிய "பாடியாடி உள்ளுடையு"முண்மை வருமாறு :

"ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
 பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
 கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்
 சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே."
- 8. திருச்சதகம், 14.
(8)
 
மத்தர் பேயரொடு பாலர் தன்மையது
    மருவியே துரிய வடிவமாய்
  மன்னு தேசமொடு கால மாதியை
    மறந்து நின்னடிய ரடியிலே
பத்தி யாய்நெடிது நம்பும் என்னையொரு
    மையல் தந்தகில மாயையைப்
  பாரு பாரென நடத்த வந்ததென்
    பார தத்தினுமி துள்ளதோ
சுத்த நித்தவியல் பாகு மோவுனது
    விசுவ மாயை நடுவாகவே
  சொல்ல வேண்டும்வகை நல்ல காதிகதை
    சொல்லு மாயையினு மில்லைஎன்
சித்த மிப்படி மயங்கு மோஅருளை
    நம்பி னோர்கள்பெறு பேறிதோ
  தெரிவ தற்கரிய பிரம மேஅமல
    சிற்சு கோதய விலாசமே.