பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

260
"காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போற்
 காணஉள் ளத்தைக் கண்டு காட்டலின்
 அயரா அன்பின் அரன்கழல் செலுமே."1
- சிவஞானபோதம், நூற்பா - 11.
     ஆண்டவன் எண்ணம் முன்செல்ல அடிமை இறைபணி பின்செல்லும் என்னும் உண்மை வருமாறு:

     "விளம்புமாவிளம்பே "பணியுமாபணியே" "கருதுமாகருதே" "உரைக்குமாறுரையே" "நணுகுமா நணுகே" "இசையுமா றிசையே" "நுகருமா நுகரே" "புணருமா புணரே" "தொடருமா தொடரே" "விரும்புமா விரும்பே" "நினையுமா நினையே" என்னும் திருவிசைப்பாத் திருப்பாட்டுகளான் உணர்க. இவற்றுள் ஒரு திருப்பாட்டு வருமாறு :

"திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
    திகைக்கின்றேன் தனைத்திகை யாமே
 நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
    நிகழ்வித்த நிகரிலா மணியே
 அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய்
    ஆலின்கீழ் இருந்த அம் பலவா
 புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
    தொண்டனேன் புணருமா புணரே."
- 9. திருமாளிகைத்தேவர், கோயில். 8.
     அறிவடையாளக் குறிப்பில் நடுவிரல் இருவினையாகவும், அணிவிரல் மாயையாகவும் சுண்டுவிரல் மலமாகவும் கொள்ளுதல்வேண்டும். இவற்றை வருமாறு நினைவு கூர்க:

"முன்னோன் பெருவிரலாம் மூவா உயிர்சுட்டாம்
 தன்னேர் நடுவினையாம் சாருமணி - பின்னேய்மெய்
 மாயையாம் சுண்டு மலமாம் புணர்ப்பொட்டாம்
 வீயா விரல்மும்மை மாசு.
     ஆலின்கீழ் அறமுரைக்குமுண்மை வருமாறு:

"ஆலின்கீழ2 நால்வர்க்கன் றறமுரைத்த அங்கணனை
 நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானைக்
 காலம்பெற் றினிதிறைஞ்சிக் கைதொழுது புறம்போந்தார்
 சீலங்கொ டென்னவனும் தேவியரும் உடன்போத."
- 12. சம்பந்தர் - 883.
     அறம் - வாழ்க்கை நூல்; வேதம். நூல்-வழிபாட்டு நூல்; ஆகமம்.

(10)
 
 1. 
'காயமொழிந்' சிவஞானசித்தியார் நூற்பா, 11.
 2. 
'ஆலின்கீழ்' 4. 36 - 16.