உரையிறந்து பெருமை பெற்றுத் திரைக்கை நீட்டி | ஒலிக்கின்ற கடலேஇவ் வுலகஞ் சூழக் | கரையுமின்றி யுன்னைவைத்தார் யாரே என்பேன் | கானகத்திற் பைங்கிளிகாள் கமல மேவும் | வரிசிறைவண் டினங்காள்ஓ திமங்காள் தூது | மார்க்கமன்றோ நீங்களிது வரையி லேயும் | பெரியபரி பூரணமாம் பொருளைக் கண்டு | பேசியதுண் டோவொருகாற் பேசு மென்பேன். |