ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை | ஓட்டுதல்போல் நான்பேதை உப்போ டப்பை | மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம் | வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் | அருளுடைய பரமென்றோ அன்று தானே | யானுளனென் றும்மெனக்கே ஆணவாதி | பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப் | பேசியதன் றேஅருள்நூல் பேசிற் றன்றே. |