திரையில்லாக் கடல்போலச் சலனந் தீர்ந்து | தெளிந்துருகும் பொன்போலச் செகத்தை எல்லாங் | கரையவே கனிந்துருக்கும் முகத்தி லேநீ | கனிந்தபர மானந்தக் கட்டி இந்நாள் | வரையிலே வரக்காணேன் என்னாற் கட்டி | வார்த்தைசொன்னாற் சுகம்வருமோ வஞ்ச னேனை | இரையிலே யிருத்திநிரு விகற்ப மான | இன்பநிட்டை கொடுப்பதையா எந்த நாளோ. |