பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

32

     ஆருயிர்கட்கு அறிவைத் தடைசெய்வதாகிய அறியாமையை உண்டாக்கும் ஆணவமலம் பண்டே புல்லீயது. இதற்கு ஒப்பு நெல்லிற் காணப்படும் உமியும், செம்பிற் காணப்படும் களிம்புமாகும். இவ்வுண்மை வருமாறு காண்க:

"அல்லன்மிக உயிர்க்கிவைதான் அணைத்த தீசன்
    அருவினைகள் அருந்துதற்கோ வினையோ அன்றிச்
 சொல்லிவரு மாயையோ அணுவை முந்தச்
    சூழ்ந்ததெனும் உரைமுதலோர் தொடக்கி லார்பால்
 ஒல்லைவரு மெனின் உளதாம் உயிருண் டாவே
    உளதுமலம் மலமுளதாய் ஒழிந்த வெல்லாம்
 நெல்லின்முளை தவிடுமிப் 1போல் அநாதி யாக
    நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்து மாறே."
- சிவப்பிரகாசம், 25.
     'அறிவுதானுமே . . . படித்ததார்' - அவ்வுயிர்கள்மாட்டு அம் மலத்தைப் பதித்துவைத்தவர் எவருமிலர். உயிர்கள் படிகத்தை ஒத்து, சார்ந்ததன் தன்மையாய் நிற்கும் இயல்பிற்று. அதனால் குற்ற ஒட்டாய மலத்தினோடுறைவது இயல்பாயிற்றென்ப. இவ்வுண்மை வருமாறு :

"பன்னிறங் கவருங் தொன்மைப் படிகநீ டொளியும் பன்மை
 மன்னிலங் கியல்பும் தந்த வளரொளி போல வையம்
 தன்னகம் பயிலும் நற்சிற் சடங்களின் தன்மை தாவா
 நன்னலம் பெறநி றைந்த ஞானமே ஞான மென்பர்."
- சிவப்பிரகாசம், 69.
     'என தாசையோ' - என்றதன் விளக்கமுணரின் ஆசையே என்ப துணரப்படும். திருவள்ளுவநாயனார் அவாவே பிறப்பினுக்கு வித்தென்னும் உண்மையை அருளுகின்றனர். அது வருமாறு :
"அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றும்
 தவாஅப் பிறப்பீனும் வித்து."
- திருக்குறள், 361.
(7)
வாரா தெலாமொழிய வருவன வெலாமெய்த
    மனதுசாட் சியதாகவே
  மருவநிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த
    மரபுசம ரசமாகவே
பூராய மாயுணர வூகமது தந்ததும்
    பொய்யுடலை நிலையன்றெனப்
  போதநெறி தந்ததுஞ் சாசுவத ஆனந்த
    போகமே வீடென்னவே
 
 1. 
'நெல்லிற் குமியும்.' சிவஞானபோதம், 2. 2 - 3.