"வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் | விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம் | நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம் | நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே | காதலினான் நான்பிரமம் என்னும் ஞானம் | கருதுபசு ஞானமிவ னுடலிற் கட்டுண் | டோதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம் | ஒன்றாகச் சிவனியல்பின் உணர்ந்திடுவன் காணே." | - சிவஞானசித்தியார், 9. 1 - 1 |