| "அதுபழச் சுவையென அமுதென அறிதற் |
| கரிதென எளிதென அமரரும் அறியார் |
| இதுஅவன் திருவுரு இவனவன் எனவே |
| எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் |
| மதுவளர் பொழில்திரு வுத்தர கோச |
| மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா |
| எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம் |
| எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே." |
| - 8. திருப்பள்ளியெழுச்சி, 7. |