பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

701
 
பதம்பர வெனப்பகர் பரமமெய்ஞ் ஞானி
 
முத்திபஞ் சாக்கர முறைமையி லயிக்கியஞ்
 
சத்திய மிதுவெனச் சார்ந்தவர்க் குரைத்தோன்
 
அஞ்செழுத் துள்ளே அனைத்தையுங் காட்டிஎன்
 200
நெஞ்சழுத் தியகுரு நீதி மாதவன்
 
எல்லா நிறைந்த இறைவன் செயலெனக்
 
கல்லா எனக்குங் கருணைசெய் கடவுள்
 
குருவரு ளாலே கூடுவ தல்லால்
 
திருவரு ளுறாதெனத் தெரிந்திட உரைத்தோன்
 205
குருவுரு வருளெனக் கொண்டபின் குறையாப்
 
பொருள்மய மாமெனப் புகன்றிடு போதன்
 
எந்தமூர்த் திகளையு மெழிற்குரு வடிவெனச்
 
சிந்தையில் தியக்கறத் தேர்ந்தவர்க் குரைத்தோன்
 
சதாசிவ மென்றபேர் தான்படைத் ததுதான்
 210
எதாவதே பொருளென் றேடுத்தெடுத் துரைத்தான்
 
கல்லானை கன்னல் கவர்ந்திடச் செய்தவன்
 
எல்லாம் வல்லசித் தெம்மிறை என்றோன்
 
எவ்வுயிர் தோறும் இறைமே வியதிறஞ்
 
செவ்விய பிரம்படி செப்பிடு மென்றோன்
 215
எவ்வண மெவரெவ ரிசைத்தன ரவரவர்க்
 
கவ்வண மாவனெம் மானென அறைந்தோன்
 
ஒருபாண னுக்கே யொருசிவ னாட்படின்
 
வருமடி யார்திறம் வழுத்தொணா தென்றோன்
 
சிவனடி யாரைச் சிவனெனக் காண்பவன்
 220
எவனவன் சிவனே என்றெடுத் துரைத்தோன்
 
விருப்பு வெறுப்பினை வேரறப் பறித்துக்
 
கருப்புகா தென்னைக் காத்தருள் சேய்தோன்
 
இருசொல் லுரையா தியானின்ப மெய்த
 
ஒருசொல் லுரைத்த உயர்குண பூதரன்
 225
அத்துவா மார்க்கம் ஆறையு மகற்றித்
 
தத்துவா தீதத் தன்மையைத் தந்தோன்
 
திருமகள் மருவிய திகழ்வா மறைசையில்
 
வருமுணர் வாளன் மருளிலா மனத்தான்