| தண்ணமர் மொழியுந் தழுதழுத் திடவே |
| உள்ளும் புறம்பும் ஒருமித் துருகி |
| வெள்ள நீர்போல் விழிநீர் பெருக்கிக் |
165 | கன்று பசுவைக் கருதிக் கதறிச் |
| சென்றுசென் றோடித் திகைப்பது போல |
| என்புநெக் குடைய இருகரங் குவித்துப் |
| புன்புலால் யாக்கை பொருந்தா தினிஎன |
| உணர்ந்துணர்ந் தன்பா யுவகைமேற் கொண்டினிக் |
170 | கணம்பிரி யேனெனக் கருதியே குறித்துத் |
| திருவுரு வெல்லாந் திருநீ றிலங்க |
| இருகர நளினம் இயன்முடி குவித்துப் |
| பூரண சந்திரன் போலொளி காட்டுங் |
| காரண வதனங் கவின்குறு வெயர்வுற |
175 | இளநிலா வெனவே இலங்கிய சிறுநகை |
| தளதள வென்னத் தயங்கி எழில்பெற |
| இத்தன்மை எல்லா மிசைந்து மிவனருட் |
| சித்தெனச் சிவகதி தேர்ந்தவ ருரைப்பப் |
| பாத்திர மாடப் பரிவுட னாடிச் |
180 | சாத்திரங் காட்டித் தயவுசெய் தருளும் |
| வல்லவ னெனவே மன்னுயிர்க் காக |
| எல்லையி லன்ப னிவனென விளங்கி |
| ஈன வுலகத் தியற்கைபொய் யென்றே |
| ஞானநூல் மெய்யென நவின்றினி திரங்கிக் |
185 | கேவல சகலங் கீழ்ப்பட மேலாய் |
| மேவருஞ் சுத்த மெய்யினை நல்க |
| அருளே உருவுகொண் டவனியில் வந்த |
| பொருளே இவனெனப் பொலிந்திடும் புனிதன் |
| சைவஞ் சிவனுடன் சம்பந்த மென்பது |
190 | மெய்வளர் ஞானம் விளக்குமென் றிசைத்தோன் |
| கதிர்விழி யொளியுறக் கலத்தல்சித் தாந்த |
| விதிமுறை யாமென விளம்பிய மேலோன் |
| முடிவினில் ஆகம முறைமையி னுண்மையை |
| அடியரைக் குறித்துரைத் தருளிய அண்ணல் |
195 | சிதம்பர நேர்மை திறமா விரைத்திறை |