| | தண்ணமர் மொழியுந் தழுதழுத் திடவே |
| | உள்ளும் புறம்பும் ஒருமித் துருகி |
| | வெள்ள நீர்போல் விழிநீர் பெருக்கிக் |
| 165 | கன்று பசுவைக் கருதிக் கதறிச் |
| | சென்றுசென் றோடித் திகைப்பது போல |
| | என்புநெக் குடைய இருகரங் குவித்துப் |
| | புன்புலால் யாக்கை பொருந்தா தினிஎன |
| | உணர்ந்துணர்ந் தன்பா யுவகைமேற் கொண்டினிக் |
| 170 | கணம்பிரி யேனெனக் கருதியே குறித்துத் |
| | திருவுரு வெல்லாந் திருநீ றிலங்க |
| | இருகர நளினம் இயன்முடி குவித்துப் |
| | பூரண சந்திரன் போலொளி காட்டுங் |
| | காரண வதனங் கவின்குறு வெயர்வுற |
| 175 | இளநிலா வெனவே இலங்கிய சிறுநகை |
| | தளதள வென்னத் தயங்கி எழில்பெற |
| | இத்தன்மை எல்லா மிசைந்து மிவனருட் |
| | சித்தெனச் சிவகதி தேர்ந்தவ ருரைப்பப் |
| | பாத்திர மாடப் பரிவுட னாடிச் |
| 180 | சாத்திரங் காட்டித் தயவுசெய் தருளும் |
| | வல்லவ னெனவே மன்னுயிர்க் காக |
| | எல்லையி லன்ப னிவனென விளங்கி |
| | ஈன வுலகத் தியற்கைபொய் யென்றே |
| | ஞானநூல் மெய்யென நவின்றினி திரங்கிக் |
| 185 | கேவல சகலங் கீழ்ப்பட மேலாய் |
| | மேவருஞ் சுத்த மெய்யினை நல்க |
| | அருளே உருவுகொண் டவனியில் வந்த |
| | பொருளே இவனெனப் பொலிந்திடும் புனிதன் |
| | சைவஞ் சிவனுடன் சம்பந்த மென்பது |
| 190 | மெய்வளர் ஞானம் விளக்குமென் றிசைத்தோன் |
| | கதிர்விழி யொளியுறக் கலத்தல்சித் தாந்த |
| | விதிமுறை யாமென விளம்பிய மேலோன் |
| | முடிவினில் ஆகம முறைமையி னுண்மையை |
| | அடியரைக் குறித்துரைத் தருளிய அண்ணல் |
| 195 | சிதம்பர நேர்மை திறமா விரைத்திறை |