| | இராசயோ கத்திறை இராசயோ கத்தான் |
| | பொறுமை தெளிவு புனிதவா சாரம் |
| 130 | மறுவிலா வண்மை வாரம் இயற்கை |
| | தண்ணமர் சாந்தந் தயங்கிய கீர்த்தி |
| | எண்ணெண் கலைபயில் இணையிலாக் கல்வி |
| | நல்ல இரக்கம் நடுநிலை சத்தியம் |
| | இல்லைஎன் னாமல் எவர்க்குந் தருங்கொடை |
| 135 | நற்குண னெல்லாம் நண்ணிய பெருந்தகை |
| | சிற்குண வாரி திருவருட் செல்வன் |
| | கரமே லெடுத்துக் கருத்துற வணங்கிப் |
| | பரமே யுனக்குப் பரமெனப் பகர்ந்தோன் |
| | ஆலடி மேவும் அரசினை அடுத்தே |
| 140 | சீலமெய்ஞ் ஞானந் தெளிந்தன னெனவுஞ் |
| | சித்த மவுனி திடசித்த மாக |
| | வைத்த நிலையின் வளர்ந்தன னெனவும் |
| | மூலன் மரபின் முளைத்த மவுனிதன் |
| | பாலன்யா னெனவும் பரிவொடும் பகர்ந்தோன் |
| 145 | வடமொழி இயற்கையின் மகிமையை உணர்ந்து |
| | திடமுற முப்பொருள் திறத்தையுந் தெளிந்து |
| | கண்டமு தென்னக் கனிரச மென்னத் |
| | தண்டமிழ் மாரி தன்னைப் பொழிந்து |
| | சித்தியும் முத்தியுஞ் சிறந்தருள் கொழிக்கும் |
| 150 | நித்திய நிரஞ்சன நிராலம்ப நிறைவைப் |
| | பாடியும் நாடியும் பணிந்தெழுந் தன்பால் |
| | ஆடியும் அரற்றியும் அகங்குழை வெய்தியும் |
| | உடலங் குழைய உரோமஞ் சிலிர்ப்ப |
| | படபடென் றுள்ளம் பதைத்துப் பதைத்துப் |
| 155 | பாங்குறு நெட்டுயிர்ப் பாகிப் பரதவித் |
| | தேங்கி ஏங்கி இரங்கி இரங்கி |
| | ஓய்ந்தபம் பரம்போ லொடுங்கியே சிறிதும் |
| | ஏய்ந்த விழிக ளிமைப்பது மின்றிச் |
| | சோர்ந்து சோர்ந்து துவண்டு துவண்டுமெய் |
| 160 | யார்ந்த அன்போ டவசமுற் றடிக்கடி |
| | உள்நடுக் குறவே உருகியே சற்றுத் |