| எல்லாம் பெறுமினென் றியம்பிய தயாநிதி |
95 | தருமமுந் தானமுந் தவமும் புரிபவர்க் |
| குரிமையா யவரோ டுறவு கலப்பவன் |
| தன்னுயிர் போலத் தரிணியின் மருவிய |
| மன்னுயி ரனைத்தையும் வளர்த்திடும் வேந்தன் |
| களவுவஞ் சனைகள்செய் கருமிகள் தமக்குந் |
100 | தெளிவுவந் துற அருள் செய்திடுந் திறத்தோன் |
| தான்பெறும் பேறு சகமெலாம் பெறவே |
| வான்பெறுங் கருணை வழங்கிய மாரி |
| தஞ்சமென் றடைந்த தாபதர் தம்மை |
| அஞ்சலென் றாளும் அறிஞர் சிகாமணி |
100 | சீவ கோடிகளுஞ் சித்த கோடிகளும் |
| யாவரும் புகழ யாவையும் உணர்ந்தோன் |
| யானென தென்னா இறைவனெம் பெருமான் |
| தானவ னாகிய தலைவனெங் கோமான் |
| அருண கிரியார்க் காறு முகன்சொல்லும் |
110 | பொருள்நல மல்லது பொருளென மதியான் |
| பூத முதலாப் பொலிந்திடு நாத |
| பேதமுங் கடந்த பெருந்தகை மூர்த்தி |
| மூலா தார முதலா யுள்ள |
| மேலா தாரமும் வெறுவெளி கண்டவன் |
115 | மண்டல மூன்றிலும் மன்னிய உருவிலும் |
| கண்டவை யத்திலுங் கடவுளாய் நின்றோன் |
| பகர்சம யந்தொறும் பரமே யிருந்து |
| சுகநடம் புரியுந் தொழிலெனச் சொன்னோன் |
| பேத அபேத பேதா பேத |
120 | போத மிதுவெனப் புகன்றிடும் புண்ணியன் |
| அதுநா னெனவே யாற்றிடும் அனுபவஞ் |
| சதுர்வே தாந்தத் தன்மையென் றுரைத்தோன் |
| அல்லும் பகலும் அறிவா னோர்க்குச் |
| சொல்லும் பொருளுஞ் சுமைஎனச் சொன்னோன் |
125 | சுதனே குருவாஞ் சுவாமிநா யகற்கெனின் |
| அதிகமெய்ஞ் ஞான மல்லவோ வென்றோன் |
| நேசயோ கத்துறு நிருபரெல் லாந்தொழும் |