பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

698
 
எல்லாம் பெறுமினென் றியம்பிய தயாநிதி
 95
தருமமுந் தானமுந் தவமும் புரிபவர்க்
 
குரிமையா யவரோ டுறவு கலப்பவன்
 
தன்னுயிர் போலத் தரிணியின் மருவிய
 
மன்னுயி ரனைத்தையும் வளர்த்திடும் வேந்தன்
 
களவுவஞ் சனைகள்செய் கருமிகள் தமக்குந்
 100
தெளிவுவந் துற அருள் செய்திடுந் திறத்தோன்
 
தான்பெறும் பேறு சகமெலாம் பெறவே
 
வான்பெறுங் கருணை வழங்கிய மாரி
 
தஞ்சமென் றடைந்த தாபதர் தம்மை
 
அஞ்சலென் றாளும் அறிஞர் சிகாமணி
 100
சீவ கோடிகளுஞ் சித்த கோடிகளும்
 
யாவரும் புகழ யாவையும் உணர்ந்தோன்
 
யானென தென்னா இறைவனெம் பெருமான்
 
தானவ னாகிய தலைவனெங் கோமான்
 
அருண கிரியார்க் காறு முகன்சொல்லும்
 110
பொருள்நல மல்லது பொருளென மதியான்
 
பூத முதலாப் பொலிந்திடு நாத
 
பேதமுங் கடந்த பெருந்தகை மூர்த்தி
 
மூலா தார முதலா யுள்ள
 
மேலா தாரமும் வெறுவெளி கண்டவன்
 115
மண்டல மூன்றிலும் மன்னிய உருவிலும்
 
கண்டவை யத்திலுங் கடவுளாய் நின்றோன்
 
பகர்சம யந்தொறும் பரமே யிருந்து
 
சுகநடம் புரியுந் தொழிலெனச் சொன்னோன்
 
பேத அபேத பேதா பேத
 120
போத மிதுவெனப் புகன்றிடும் புண்ணியன்
 
அதுநா னெனவே யாற்றிடும் அனுபவஞ்
 
சதுர்வே தாந்தத் தன்மையென் றுரைத்தோன்
 
அல்லும் பகலும் அறிவா னோர்க்குச்
 
சொல்லும் பொருளுஞ் சுமைஎனச் சொன்னோன்
 125
சுதனே குருவாஞ் சுவாமிநா யகற்கெனின்
 
அதிகமெய்ஞ் ஞான மல்லவோ வென்றோன்
 
நேசயோ கத்துறு நிருபரெல் லாந்தொழும்