| 60 | பொருந்திய இன்பம் பொழிசிற் சுகோதயம் |
| | எங்கணும் நிறைந்த இயல்பினை எனக்குச் |
| | செங்கையால் விளங்கத் தெரித்தமெய்த் தேசிகன் |
| | தன்னையறி வித்துத் தற்பர மாகி |
| | என்னுளத் திருந்தருள் ஏக நாயகன் |
| 65 | அடிமுடி இல்லா அரும்பொருள் தனக்கு |
| | முடியடி இதுவென மொழிந்திடும் முதல்வன் |
| | மெய்யலான் மற்றவை மெய்யல வெல்லாம் |
| | பொய்யென அறியெனப் புன்னகை புரிந்தோன் |
| | அருளும் பொருளும் அபேதமா யிருந்தும் |
| 70 | இருதிற னென்னும் இயலுமுண் டென்றோன் |
| | அருளுனக் குண்டேல் அருளும் வெளிப்படும் |
| | பொருள்மயந் தானே பொருந்துமென் றுரைத்தோன் |
| | சத்தசத் திரண்டு தன்மையுந் தானே |
| | ஒத்தலாற் சதசத் துனக்கென உரைத்தோன் |
| 75 | ஆணவம் அறாவிடின் அருளுறா தென்னக் |
| | காணரு நேர்மையாற் காணவே உரைத்தோன் |
| | சென்மமுள் ளளவுந் தீரா திழுக்குங் |
| | கன்மம் விடாதெனக் காட்டிய வள்ளல் |
| | உளதில தெனவும் உறுதலான் மாயை |
| 80 | வளமில தெனவும் வகுத்தினி துரைத்தோன் |
| | இல்லறத் திருந்தும் இதயம் அடக்கிய |
| | வல்லவன் தானே மகாயோகி என்றோன் |
| | துறவறத் திருந்துஞ் சூழ்மனக் குரங்கொன் |
| | றறவகை யறியான் அஞ்ஞானி என்றோன் |
| 85 | இறவா மனந்தான் இறக்க உணர்த்திப் |
| | பிறவா வரந்தரும் பேரறி வாளன் |
| | அத்தன தருளால் அனைத்தையும் இயக்குஞ் |
| | சுத்தமா மாயையின் தோற்றமென் றுரைத்தோன் |
| | இருள்மல மகல இசைந்ததில் அழுந்தும் |
| 90 | பொருளருட் டிரோதைப் பொற்பெனப் புகன்றோன் |
| | வீறு சிவமுதல் விளம்பிய படியே |
| | ஆறு மநாதிஎன் றறிஞருக் குரைப்போன் |
| | கொல்லா விரதங் குவலயத் தோர்கள் |