பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


87


    (அகப்புறம்) பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாதசைவம்.

    அகச்சமயத்தார் முதல்வன் உண்மை தெளியப் பெற்றும் திருவடிக்கலப்புண்மை தெளியா நிலையினர். இவற்றின் தன்மை,

இறையுண்மை யில்லார் இறையுயிரே என்பார்
இறைகோலம் பேற்றியைபில் லார்.
    இச் சமயங்களின் புன்மை வருமாறு :

     "உவலைச் சமயங்கள்" (பக்கம் 53)

"சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்
 றாவி யறாதேயென் றுந்தீபற
 அவ்வுரை கேளாதே யுந்தீபற."
- திருவுந்தியார், 13
பாசம் என்பது ஆணவமல விருளென்பதனை வருமாறுணர்க :

"இருளான தன்றி இலதெவையும் ஏகப்
 பொருளாகி நிற்கும் பொருள்."
- திருவருட்பயன், 22
    "மெய்யுணர்வுடையாரை மதயானையாக" உருவகிக்கும் உண்மை வருமாறுணர்க :

"கலைதேர் நமச்சி வாயகுரு கருணைக் கடலிற் றிளைத்தாடி
    கலகப் பாசத் தொடரறுத்துக் காமத் தறியை யறவீழ்த்தி
 அலையும் சமயத் தருக்களைக்கீழ் அடிவே ரோடும் அகழ்ந்தெறிந்திட்
    டருளின் படாத்தை முகமேற்கொண் டாதி வேதா கமங்களெனும்
 தொலையா மணிகள் இருமருங்கும் தொனிக்கச் சைவ மதம்பொழிந்து
    துங்க மோடும் உலகமுற்றும் சுற்றும் வெற்றி வாரணமே
 மலையா தருளும் முனிவர்சிகா மணியே வருக வருகவே
    வளமார் துறைசைச் சிவஞான வள்ளால் வருக வருகவே."
- திரு. பொ. பாண்டித்துரைத்தேவர், தனிப்பாடல்.
(1)
ஐந்துவகை யாகின்ற பூதமுதல் நாதமும்
    அடங்கவெளி யாகவெளிசெய்
  தறியாமை யறிவாதி பிரிவாக அறிவார்கள்
    அறிவாக நின்றநிலையில்