பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


112


    குரவனருளால் தூவொளி தோன்றிய ஞான்று மாயாகாரியங்களும் விளக்கிய கண்ணாடிபோன்று தூய்தாய்த் துணையாம் உண்மை வருமாறு :

"மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
 ஆயஆ ருயிரின் மேவும் மருளெனின் இருளாய் நிற்கும்
 மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
 ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்."
- சிவப்பிரகாசம், 70.
(2)
எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே
    எல்லாமுன் னுடையசெயலே
  எங்கணும் வியாபிநீ என்றுசொலு மியல்பென்
    றிருக்காதி வேதமெல்லாஞ்
சொல்லான் முழக்கியது மிக்கவுப காரமாச்
    சொல்லிறந் தவரும்விண்டு
  சொன்னவையு மிவைநல்ல குருவான பேருந்
    தொகுத்தநெறி தானுமிவையே
அல்லாம லில்லையென நன்றா அறிந்தேன்
    அறிந்தபடி நின்றுசுகநான்
  ஆகாத வண்ணமே இவ்வண்ண மாயினேன்
    அதுவுநின தருளென்னவே
கல்லாத அறிஞனுக் குள்ளே யுணர்த்தினை
    கதிக்குவகை யேதுபுகலாய்
  கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
    கருணா கரக்கடவுளே.
     (பொ - ள்) "எல்லாமு . . . முழக்கியது" - (அறிவித்தாலறியும் ஆருயிரினங்கள்) அனைத்தும் உன்னுடைய மீளா அடிமையே, (அசைவித்தால் அசையும் மாயாகாரியப் பொருள்கள்) அனைத்தும் (கடவுளே) உன் உடைமையே, (உலகில் நடக்கும் செயல்களனைத்தும் உன் திருமுன் உன் திருவருட்டுணையால் நடப்பன ஆதலின்) எல்லாமும் உன் செயலே என்றும், (எங்கணும் தாங்கு நிறைவாக நீ என்று நீங்காதிருக்கின்ற தன்மையால்) யாண்டும் பெருநிறைவாக நீ இருக்கின்றாயென்று சொல்லும் இயல்பென்று மந்திரங்களைத் தன்னகத்துக் கொண்டுள்ள மறை முறைகளெல்லாம் முழக்கியது.