பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


164


அன்பின்வழி யறியாத என்னைத் தொடர்ந்தென்னை
    அறியாத பக்குவத்தே
  ஆசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்துநான்
    அற்றேன் அலந்தேன்என
என்புலன் மயங்கவே பித்தேற்றி விட்டாய்
    இரங்கியொரு வழியாயினும்
  இன்பவௌ மாகவந் துள்ளங் களிக்கவே
    எனைநீ கலந்ததுண்டோ
தன்பருவ மலருக்கு மணமுண்டு வண்டுண்டு
    தண்முகை தனக்குமுண்டோ
  தமியனேற் கிவ்வணந் திருவுள மிரங்காத
    தன்மையால் தனியிருந்து
துன்பமுறி னெங்ஙனே யழியாத நின்னன்டர்
    சுகம்வந்து வாய்க்கும்உரையாய்
  சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
    சோதியே சுகவாரியே.
     (பொ - ள்) "அன்பின் வழி . . . விட்டாய்" - (ஆவிக்குரிய அன்பறிவாற்றல்கள் மூன்றனுள் அன்பின் பெருக்கம் பலவகை, அவற்றுள் இறவாத இன்ப அன்பே இறைவன்பால் வைக்கும் மெய்யன்பாகும்.) அத்தகைய அன்பின் வழியறியாத அடியேனைத் தொடர்ந்து வந்து என்னையே யான் தெளிவாக அறிந்துகொள்ளுதற்குரிய வாய்ப்பில்லாத நேரத்தே (அடியேன் நின்பாற்கொள்ளும்) வேட்கைப் பெருக்கை மிகுவித்து, அடியேன் தீர்ந்தேன், எண்ணி வாடினேன் என்று சொல்லும்படி அடியேன் அறிவுமயக்கமுறும்படி பித்தினை ஏற்றிவிட்டருளினை :

    "இரங்கியொரு . . . உண்டோ" - (அடிகளீர் - தேவரீர்) அடியேன் பால் ஒருபொழுதாயினும் இரக்கங்கொண்டு நின்திருவடியின்பு வெள்ளமாக வந்து எளியேன் உள்ளங் களிப்பெய்தும் பொருட்டு அடியேனை நீ கலந்தருளியதுண்டோ? செவ்வி முதிர்ந்து நன்றாக மலர்ந்த மலரினுக்கு (விருந்தளிக்க உளங்கலந்த அன்பொடு அழைப்பது போன்ற) நறுமணமுண்டு, மணமுண்டாகவே, (நுகர்ந்து இன்புற்றுக் கழிமகிழ்வெய்துதற்கு ஏதுவாம்) தேனுமுண்டு; (அத் தேனையுண்டு பேரின்பம் எய்தும் இயல்புசேர்) வண்டுமுண்டு; இவ்வனைத்தும் குளிர்ச்சிமிக்க அரும்பொடு போதுகளுக்கு எக்காலத்து முண்டோ? போது - பேரரும்பு.

    "தமியனேற் . . . சுகவாரியே" - (துணையின்றித்) தனித்திருக்கின்ற அடியேனுக்கு இவ்வகையாகத் திருவுள்ளம் சிறிதும் இரங்காத தன்மையால், தனிமையாக விருந்து (எளியேன்) துன்பப்பட்டால், உன்னுடைய