வெந்நீர் பொறாதென்உடல் காலில்முள் தைக்கவும் | வெடுக்கென் றசைத்தெடுத்தால் | விழிஇமைத் தங்ஙனே தண்ணருளை நாடுவேன் | வேறொன்றை யொருவர்கொல்லின் | அந்நேரம் ஐயோஎன் முகமவாடி நிற்பதுவும் | ஐயநின் னருள் அறியுமே | ஆனாலும் மெத்தப் பயந்தவன் யான்என்னை | ஆண்டநீ கைவிடாதே | இந்நேர மென்றிலை உடற்சுமைய தாகவும் | எடுத்தா லிறக்கஎன்றே | எங்கெங்கு மொருதீர்வை யாயமுண் டாயினும் | இறைஞ்சுசுக ராதியான | தொன்னீர்மை யாளர்க்கு மானுடன் வகுத்தஅருள் | துணையென்று நம்புகின்றேன் | சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |