எந்தநாள் கருணைக் குரித்தாகு நாளெனவும் | என்னிதயம் எனைவாட்டுதே | ஏதென்று சொல்லுவேன் முன்னொடுபின் மலைவறவும் | இற்றைவரை யாதுபெற்றேன் | பந்தமா னதிலிட்ட மெழுகாகி உள்ளம் | பதைத்துப் பதைத்துருகவோ | பரமசுக மானது பொருப்பரிய துயரமாய்ப் | பலகாலு மூர்ச்சிப்பதோ | சிந்தையா னதுமறிவை என்னறிவி லறிவான | தெய்வம்நீ யன்றியுளதோ | தேகநிலை யல்லவே உடைகப்பல் கப்பலாய்த் | திரையாழி யூடுசெலுமோ | சொந்தமா யாண்டநீ அறியார்கள் போலவே | துன்பத்தி லாழ்த்தல்முறையோ | சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |