காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு | கல்லின்முன் னெதிர்நிற்குமோ | கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின் | கருணைப்ர வாகஅருளைத் | தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ | தமியனேற் கருள்தாகமோ | சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ் | சங்கேத மாய்க்கூடியே | தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள் | சேராமல் யோகமார்க்க | சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்கும்என் | சிந்தைக்கும் வெகுதூரம்நான் | ஏகமாய் நின்னோ டிருக்குநா ளெந்தநாள் | இந்நாளில் முற்றுறாதோ | இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி | எங்குநிறை கின்றபொருளே. |